www.asiriyar.net

Monday 28 August 2017

ஓய்வூதியம் கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் (டாக்பியா) இன்று சென்னையில் ஊர்வலம்.

ஓய்வூதியம் வழங்க கோரி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர் (டாக்பியா) குடும்பத்துடன் சென்னையில் ஊர்வலம் நடத்த முடிவு செய்துள்ளனர்.மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர் சங்க திண்டுக்கல் மாவட்ட பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் அறிக்கை:

தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்கத்தின் மூலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணியாற்றும் ஒய்வு பெற்ற பணியாளர்களுக்குஓய்வூதியமும், ஒய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியமும் வழங்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.

இதுவரை கோரிக்கை நிறைவேற்றப்படாததால்ஆறு அம்ச கோரிக்கை வலியுறுத்தி 28ம்தேதி தமிழக முதல்வரை சந்தித்து மனுக்கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் பணியாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ள உள்ளனர். இம் மாவட்டத்தில் இருந்து ஆயிரத்து 200 பேர் பங்கேற்க உள்ளனர், என்றார்.

No comments:

Post a Comment