www.asiriyar.net

Tuesday 26 December 2017

பள்ளிக் கல்வித்துறையில் கனவு ஆசிரியர் விருது அறிமுகம் – செங்கோட்டையன்



தமிழகம் முழுவதும் 192 ஆசிரியர்களை தேர்வு செய்து கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன், 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று கூறினார்.

பாலிடெக்னிக் விரிவுரையாளருக்கான தேர்வு முறைகேடு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment