www.asiriyar.net

Saturday 16 December 2017

NMMS - 'ஸ்காலர்ஷிப்' பெற இன்று திறன் தேர்வு

உயர்கல்வி வரை அரசின் உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 1.45 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.பள்ளி மாணவர்களுக்கு, அரசின் பல்வேறு திட்டங்களில், உதவித்தொகை வழங்கப்படுகிறது.

சில திட்டங்களுக்கு, திறன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த வகையில், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்க, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, மாநிலஅளவில் இன்று நடக்கிறது.தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், 503 மையங்களில் நடக்கும் தேர்வில், ௧.௪௬ லட்சம் மாணவர்கள் பங்கேற்கின்றனர். காலை, 9:30 மணி முதல் பகல், 1:00 மணி வரை தேர்வு நடக்கிறது.

No comments:

Post a Comment