www.asiriyar.net

Saturday 6 January 2018

அரக்கோணம் மாணவிகள் தற்கொலை - பணியிடைநீக்கம் செய்யப்பட்ட‌ ஆசிரியைகளுக்கு மீண்டும் பணி

வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் நான்கு மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியை மற்றும் முதுகலை
ஆசிரியை ஆகியோரின் பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு தலைமை ஆசிரியைக்கு திருவலம் அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளிக்கும் முதுகலை ஆசிரியைக்கு திருப்பத்தூர் அருகே பேராம்பட்டு அரசு மேனிலைப் பள்ளிக்கும் பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல காட்டுப்பாக்கம் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரின் பணியிடை நீக்கமும் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அதே பள்ளிக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர், வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் அவர்களுக்கும் வேலூர் மாவட்ட அனைத்து ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் சங்கங்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

1 comment: