www.asiriyar.net

Thursday 8 February 2018

தமிழகத்தில் 28 லட்சம் பேர் எழுதும் பொது தேர்வுகள் மார்ச்சில் துவக்கம்

தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2, பிளஸ் 1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம் துவங்கஉள்ளன. இந்த தேர்வுகளில், 28 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 3,500 பள்ளிகளில், தேர்வு மையங்கள்அமைக்கப்படுகின்றன.


தமிழக பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1க்கும்பொது தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல் பொது தேர்வு துவங்க உள்ளது. இதில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒன்பது லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களில், 8.69 லட்சம் பேர், பள்ளிகளில் படிக்கும் மாணவ -- மாணவியர்.தமிழகத்தில் இருந்து, 6,754 பள்ளிகளைச் சேர்ந்த, 8.52 லட்சம் மாணவ - மாணவியரும், புதுச்சேரியில், 147 பள்ளிகளைச் சேர்ந்த, 15,140 மாணவர்களும், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.

இத்தேர்வு எழுதுவோரில், 4.03 லட்சம் பேர் மாணவர்கள்; 4.64 லட்சம் பேர் மாணவியர். 5.48 லட்சம் பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் தேர்வுஎழுத உள்ளனர். வரலாறு பிரிவில், 14 ஆயிரம்; வணிகவியல்,கணக்கு பதிவியல் பிரிவில், 2.42 லட்சம் பேரும் தேர்வு எழுதுகின்றனர். தொழிற்கல்வி பிரிவில் படிக்கும், 62 ஆயிரத்து, 751 பேரும், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவை தொடர்ந்து, இந்தாண்டு, 279 தேர்வு மையங்கள் கூடுதலாகஅமைக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல், பொது தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது; மார்ச், 7ல் தேர்வுகள் துவங்குகின்றன. பிளஸ் 2 வகுப்புகள் அறிமுகமாகி, 40 ஆண்டு களில், பிளஸ் 1 மாணவர்கள், முதன் முறையாக பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இந்த ஆண்டு, 8.62 லட்சம் பேர், பிளஸ் 1 தேர்வு எழுத உள்ளனர். இவர்களில், 4.60 லட்சம் மாணவியர் அடங்குவர்.இத்தேர்வுகளுக்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,790 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச், 16ல் துவங்கும் 10ம் வகுப்பு தேர்வில், 10.70 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களில், 5.10 லட்சம் பேர் மாணவியர்.

No comments:

Post a Comment