www.asiriyar.net

Tuesday 19 September 2017

'நெட்' பிழைகளை திருத்த வாய்ப்பு

அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், உதவி பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். பல்கலைமானியக்குழு சார்பில், சி.பி.எஸ்.இ., இந்த தேர்வை நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான, 'நெட்' தேர்வு, நவ., 5ல் நடக்கிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தோருக்கு, அவர்களின் விண்ணப்பம் மற்றும் பதிவு செய்யப்பட்ட தகவல்களில் பிழைகள், மாற்றங்கள் இருந்தால், திருத்தி கொள்ளலாம்.

இதற்கான அவகாசம், இன்று முதல், வரும், ௨௫ம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.திருத்த விரும்பும் விண்ணப்பதாரர்கள், cbsenet.nic.in என்ற இணையதளத்தில், தங்கள் பதிவுகளை ஆய்வு செய்து கொள்ளலாம்

No comments:

Post a Comment