www.asiriyar.net

Monday 2 October 2017

CPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு மாநாட்டில் அறிவிப்புகளை அறிவிப்பார் - ஜாக்டோ-ஜியோ ( கிராப்)

ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பினர் உடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை

சென்னை : ஜாக்டோ-ஜியோ- GREAF அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது (02.10.2017 -12.00 மணி முதல் 1.00 மணி வரை) ஆலோசனை நடத்தி முடித்தார். 

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வரது இல்லத்தில் ஆலோசனை கூட்டம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இச்சந்திப்பில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய  மாநிலத் தலைவர் திரு.இரா.சண்முகராஜன், தலைமைச் செயலக சங்க தலைவர் திரு.ஜெ.கணேசன், தொடக்கப் பள்ளி  ஆசிரியர் கூட்டனி தலைவர் திரு.பெ.இளங்கோவன் | த.நா. அ.அலுவலக உதவியாளர் (ம) அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் திரு.கே.க கணசன், த.நா. அரசு அனைத்துத் துறை ஊர்தி ஓட்டுநர் சங்க மாநிலத் தலைவர் திரு. அ. ஜ.பாலமுருகன், உள்ளிட்ட ஆசிரியர்  அமைப்பினர் கலந்து கொண்டுள்ளனர். 

7-வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்துதல், மற்றும் உடனடி தீர்வாக இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்தும், Cps ரத்து செய்து ops வழங்குவது தொடர்பான ஜாக்டோ-ஜியோ (GREAF) அமைப்பு சார்பில் திருச்சியில் நடத்தும் CPS - ஒழிப்பு மாநாட்டில் தமிழக முதல்வர் மாண்புமிகு. எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் கலந்து கொண்டு மாநாட்டில் அறிவிப்புகளை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஜாக்டோ-ஜியோ ( கிராப்)

No comments:

Post a Comment