www.asiriyar.net

Saturday 14 October 2017

JACTTO-GEO : இடைநிலை ஆசிரியர் ஊதியம் & 21 மாத நிலுவையை வழங்க அக்.23 வரை அரசிற்குக் கெடு

நேற்று (13.10.17) சென்னையில் கூடிய JACTTO-GEO உயர்மட்டக்குழுவின் அவசரக் கூட்டத்தில் 'தமிழக அரசின் ஊதிய மாற்ற அறிவிப்பு 2017' பற்றி விவாதிக்கப்பட்டது. 
☀JACTTO-GEO-வின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றான, 
☀இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு நீங்கிய ஊதிய மாற்றத்தை நடைமுறைப்படுத்துதல் பற்றிய கோரிக்கையை அரசு பொருட்படுத்தாது,
☀21 மாத ஊதிய நிலுவையை வழங்காமல் ஊழியர்களின் ஊதியத்தைப் பறித்துக் கொண்ட ஏமாற்று வேலையைக் கண்டித்து, 
*☀அக்டோபர் 20 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் ஊதியக்குழு முரண்பாடுகள் & அரசின் ஏமாற்றுக் குணத்தை விளக்கிக் கண்டனக் கூட்டம்* நடத்துதல் என்றும், 
☀அடுத்தகட்ட நீதி மன்ற விசாரணை நாளுக்குள் ( *23.10.2017-ற்குள்* ), 
*☀இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண் உட்பட அனைத்து முரண்பாடுகளையும் நீக்கி* 
*☀21 மாத ஊதிய நிலுவையை வழங்காவிட்டால்,*

*☀24.10.2017-ல்* நடைபெறும் ஜேக்டோ-ஜியோவின் மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் *அடுத்த கட்டப் போராட்ட நடவடிக்கை*யை இறுதி செய்வது என்றும் முடிவாற்றப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment